உலகையே அச்சுறுத்திகொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மக்களை பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை வடமாகாண ஆளுநர் முன்னெடுத்து வருகிறார். இலங்கையிலும் கொரோனா வைரஸ்ஸின் தொற்று தொடர்பிலான தகவலை அவதானிக்கும் போது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் வெளிநாடு சென்று வந்தவர்கள் இந்நோய் தொற்றுக்கான பரம்பலை ஏற்படுத்தியவர்கள் என்று அவதானிக்கபட்டுள்ளது.
இதன்பொருட்டு வடமாகாணத்திற்கான நிலமைகளை கருத்திற்கொண்டு இங்கு வருகை தந்த வெளிநாட்டு பயணிகள் தொடர்பாக வடமாகாண ஆளுநரின் பணிப்புரையில் ஆளுநர் செயலகம் உரிய அமைச்சுக்கள் திணைக்களங்களூடாக பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக வடமாகாணத்தில் உள்ள சுற்றுலா விடுதிகளை கண்காணிப்பதும் பராமரிப்பதும் அவற்றினூடாக தகவல்களை பெற்றுக்கொள்ளவதும் அவசியமானதென கருதி 17.03.2020 அன்று வடமாகாண ஆளுநர் செயலகத்தில் சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களுடனான முக்கியமான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதன்போது குறித்த சுற்றுலாவிடுதிகளின் உரிமையாளர்கள் முகாமையாளர்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கடந்த பங்குனி முதலாம் திகதியிலிருந்து பதினைந்தாம் திகதிவரை சராசரியாக 200 வெளிநாட்டு உல்லாச பயணிகள் ஒவ்வொரு சுற்றுலா விடுதிளிலும் தங்கி சென்றுள்ளனர். தற்போது சுற்றுலா விடுதிகளில் தங்கி இருக்கும் வெளிநாட்டு பிரஜைகள் தமது நாடுகளுக்கு திரும்பி செல்வதையே அதிகம் விரும்புகிறார்கள். அத்துடன் கடந்த வாரங்களில் அதிக திருமணங்கள் மற்றும் பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி காரணமாகவும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர்.
Post a Comment