Ads (728x90)

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து சர்வதேச விசாரணையை கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது தலைகளில் கருப்பு பட்டிகளை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கோத்தா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே? சர்வதேசத்தில் மகளிர் கொண்டாட்டம் எங்களிற்கு கண்ணீர் போராட்டம் , சர்வதேசமே இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் ஏற்று ,இலங்கையின் ஜனநாயகம் தமிழின அழிப்பிலா?, கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், நலன் விரும்பிகள், வர்த்தக சங்கத்தினர் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget