இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த நான்கரை வருடங்களில் கடந்து வந்த பாதை“ என்னும் தலைப்பில் சமகால அரசியல் ஆய்வு நேற்று முன்தினம் மாலை வடமராட்சி மாலுசந்திப் பிள்ளையார் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தலின் போது முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பு பரிசீலித்தது. அந்தக் கலந்துரையாடலில் அப்போது எம்முடன் இணைந்திருந்த கஜேந்திரகுமார் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க சம்மதம் தெரிவித்திருந்தார்.
எனினும் மறுநாள் கஜேந்திரனுக்கும்,பத்மினி சிதம்பரநாதனுக்கும் ஆசனம் வேண்டும் என கோரினார். இந்த ஆசன பங்கீட்டில் அவர்களுக்கு ஆசனம் கொடுக்கவில்லை என்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கஜேந்திரகுமார் வெளியேறினார்.
மற்றபடி அவர்களுக்கு ஒரு கொள்கையும் இருக்கவில்லை. அதனால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய கஜேந்திரகுமாரால் ஒரு தடவை கூட பாராளுமன்ற தேர்தலில் வெல்ல முடியாமல் இருக்கின்றது.
அடுத்து ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படாமையால் வெளியேறினார்.
ஆனால் இப்போது நிலைமை என்ன? அவர்கள் இருவரும் பதவி ஆசைக்கு ஒன்றிணைந்து எம்மை விமர்சிக்கின்றனர். மக்கள் இவர்களின் உண்மை முகங்களை அறிவார்கள். தேர்தலில் தக்க பதில் வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.

Post a Comment