இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,463 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, 29 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து இதுவரை எந்த ஒரு 24 மணி நேரத்திலும் இவ்வளவு பாதிப்புகள் இந்தியாவில் ஏற்பட்டதில்லை.
இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 10,815 ஆகியுள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 353 ஆகியுள்ளது. இதுவரை தொற்று ஏற்பட்டவர்களில் 1,190 பேர் குணமடைந்துள்ளனர். இத்தகவல்களை இந்தியாவின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என மாநில சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதுவரை கோவிட்-19 தொற்றால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1204ஆக உள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 10,815 ஆகியுள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 353 ஆகியுள்ளது. இதுவரை தொற்று ஏற்பட்டவர்களில் 1,190 பேர் குணமடைந்துள்ளனர். இத்தகவல்களை இந்தியாவின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என மாநில சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதுவரை கோவிட்-19 தொற்றால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1204ஆக உள்ளது.
Post a Comment