எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இதன் பின்னர் தேர்தல் இடம்பெறும் தினம் வரை அமைதிக்காலம் பேணப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் எஸ். ரத்நாயக்க தெரிவித்தார்.
இம்முறை பாராளுமன்ற தேர்தல் 12,985 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவுள்ளதோடு, வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் 71 நிலையங்களில் இடம்பெறவுள்ளது. இதற்காக 2,820 வாக்கு எண்ணும் மண்டபங்கள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தேர்தல் கடமைகளில் பொலிஸார் உள்ளிட்ட 3.5 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment