அங்கப்பிரதஸ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையில் இன்று செவ்வாய்கிழமை நடந்த விசேட அமர்வில் பொது சுகாதார பரிசோதகர்களாலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச நல்லூர் திருவிழாவில் 500 ற்கும் அதிகமான பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார். ஆனால் பிரதமரின் அறிவிப்பு தொடர்பில் பொது சுகாதார பரிசோதர்களுக்கு உத்தியோக பூர்வமாக எந்த அறிவுறுத்தலும் கிடைக்கப்பெறவில்லை.
நல்லூருக்குள் நுழையும் அனைத்து நுழைவாயில்களிலும் உணர்திறன் கூடிய கமராக்களை பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்குள் நுழைபவர்கள் கமராவில் தமது முகத்தையும், அடையாள அட்டையையும் காண்பித்த பின்னரே நுழைய முடியும்.
ஆலய சூழலில் எந்த வியாபார ஸ்தலங்களையும் அனுமதிப்பதில்லையென முடிவாகியுள்ளது. இதனால் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதன்படி திருவிழாவில் 300 பக்தர்களையே அனுமதிக்க முடியும் என்பதுடன் மேலும் அன்னதானம், வியாபார நிலையங் கள், தண்ணீர்ப் பந்தல்கள் போன்றவற்றினையும் இம்முறை தடை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment