பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரசார கூட்டங்கள் 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதோடு அமைதி காலம் ஆரம்பமாகிறது. எனவே அமைதி காலத்தில் சட்டத்திற்கு முரணாகச் செயற்படுபவர்களுக்கு எதிராக துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளது.
எனவே 02 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் பிரசார கூட்டங்களை நடத்துதல் , கிராமங்களிலும், வீடுகளிலும் கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாகச் சென்று வாக்குகளைக் கேட்டல், துண்டுப் பிரசுரங்களை விநியோ கித்தல், அறிவித்தல் கொடுக்கப்பட்ட கிளை அலுவலகங்களில் பிரசார பலகைகளை காட்சிப்படுத்தியிருத்தல் மற்றும் சுவரொட்டிகளையும், அறிவித்தல்களையும், பதாதைகளையும் காட்சிப்படுத்தல் என்பவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவின் பின்னர் ஆரம்பமாகும் அமைதி காலப்பகுதியினுள் அனைத்து அரசியல் கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்கள் இவற்றைத் தவிர்த்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்றுக்கு முடிந்தளவு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று ஆணைக்குழு எதிர்பார்க்கின்றது.
அமைதி காலப்பகுதியினுள் மேற்கூறப்பட்ட சட்ட விரோதமான செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் ஊடாக அனைத்து பொலிஸ் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment