சீனா தனது முதல் சுயாதீன விண்கலத்தை இன்று செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சீனா செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலத்தை இன்று வெற்றிகரமாக அனுப்பி உள்ளது. சீனாவின் மிகப்பெரிய கேரியர் ரொக்கெட், லாங் மார்ச் 5 மூலம் மதியம் 12:41 மணிக்கு இவ்விண்கலத்தை தெற்கு தீவான ஹைனானில் உள்ள வென்சாங் விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பியுள்ளது.
செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் வகையில் ஆர்பிட்டர், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் லேண்டர் மற்றும் அங்கு பயணித்து ஆராய்ச்சி செய்யும் ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கிய டினாவென் - 1 என்ற சீன விண்கலம் லாங் மார்ச் 5 ரொக்கெட்டின் மூலம் ஏவப்பட்டது.
இந்த விண்கலம் பெப்ரவரி மாதத்தில் செவ்வாய் கிரகத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு 90 நாட்களுக்கு கிரகத்தை ஆராய ஒரு ரோவரை இறக்கி ஆய்வு நடத்தவுள்ளது.
கடந்த திங்களன்று ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்திற்கு ஹோப் விண்கலத்தை அனுப்பிய நிலையில், சீனாவும் செவ்வாயை நோக்கிய தன் முதல் பயணத்தை தொடங்கியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment