க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்துவதற்கு கல்வியமைச்சு தற்போது தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 06ஆம் திகதி வரையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ளது.
அதற்கான புதிய, பழைய பாடத்திட்டங்களுக்கான பரீட்சை நேர அட்டவணை இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சை நேர அட்டவணைகள் இணைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)





Post a Comment