Ads (728x90)

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு வரியை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூர் உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு அதிக விலையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோ உருளைக்கிழங்கிற்கு இறக்குமதி வரி ரூபா 50 இலிருந்து ரூபா 55 ஆக அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 02ஆம் பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த வரி அதிகரிப்பு எதிர்வரும் 04 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget