Ads (728x90)

நான்கு பாரிய நகரங்களில் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை மையப்படுத்தி “சி” வடிவம் கொண்ட பொருளாதார கட்டமைப்பை நிர்மாணித்து சர்வதேச வியாபாரத்துடன் போட்டியிடுகின்ற நாடாக இலங்கையை கட்டியெழுப்பவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்

சர்வதேச தொடர்பு மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நான்கு பாரிய நகர திட்டத்தில் ஹம்பாந்தோட்டை, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களை இணைப்பதாகவும் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் நேற்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget