Ads (728x90)

20வது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது. 20வது திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கிய முதலாவது பாரிய நடவடிக்கை என கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

20வது திருத்தம் மூலம் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கான மக்களின் உரிமை பறிக்கப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியை சுற்றி அதிகாரமையம் ஒன்று உருவாக்கப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் ஒரு வருடத்தில் கலைக்ககூடிய அரசாங்கத்தை நாடாளுமன்றத்தில் உருவாக்குவதற்காக 13 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget