இலங்கை அரசாங்கத்தின் 20வது திருத்தம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையார் தனது கவலைகளை வெளியிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 45 வது அமர்வின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய சுயாதீன குழுக்களின் எதிர்காலம் 20வது திருத்தத்தில் தங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் மனித உரிமைகள் பேரவையில் தனது இலக்கை மாற்றி வருவதாகவும் தனது கவலைகளை பச்லெட் குறிப்பிட்டார்.
இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையில் தனது கடமைகளை விரைவாக மறுத்து வருவதால் நான் கவலைப்படுகிறேன். ஏனெனில் அது 30/1 தீர்மானத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்றமை,
சட்டவிரோத கொலைகளில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜெண்டிற்கு மார்ச் மாதத்தில் மன்னிப்பு வழங்கப்பட்டமை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூத்த இராணுவ அதிகாரிகளின் முக்கிய சிவில் பதவிகளுக்கான நியமனங்கள் எதிர்மறையான போக்காக அமைகின்றது.
பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பங்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் பச்லெட் கூறினார்.
அமைதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கு அச்சுறுத்தல்களைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு இலங்கை மீது விசேட கவனம் செலுத்துமாறு அவர் சபையை கேட்டுக் கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment