Ads (728x90)

இனப்பிரச்சினைக்கான தீர்வாக நாடு தமிழ்கட்சிகள் முன்வைத்துள்ள சமஷ்டி முறையை நோக்கி செல்ல வேண்டும் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க பத்திரிகைக்கான பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பு திருத்தங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அரசாங்கம் ஜனாதிபதிக்கு முழு அதிகாரத்தையும் வழங்க முயல்கின்றது. மிகவும் ஆபத்தானது. இந்த அரசியலமைப்பு சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கலாம். இதனால் 20வது திருத்தத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்.

மேலும் உத்தேச 20வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியால் அவசர சட்டங்களை கொண்டு வரமுடியும். அமைச்சரவையில் அங்கம் வகிக்ககூடிய அமைச்சர்களின் எண்ணிக்கையை மாற்றமுடியும். கணக்காய்வு ஆணைக்குழுவையும் அவர் இரத்து செய்யமுடியும்.

20வது திருத்தம் நடைமுறைக்கு வந்ததும் இலங்கையில் ஜனநாயக ஆட்சி முறை காணப்படாது. இதன் காரணமாக நாட்டின் நிதிஸ்திரதன்மையை பாதிக்கும்.

இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாங்கள் விவாதிக்க வேண்டும் என நாங்கள் கருதுகின்றோம்.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக நாங்கள் மேற்கொள்ளும் சத்தியப்பிரமாணத்துக்கும், இன்னொரு நாட்டின் பிரஜையான பின்னர் நபர் ஒருவர் செய்யும் சத்தியப்பிரமாணத்துக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது.
மேலும் இது பொதுமக்களின் பிரதிநிதிகளின் நாட்டிற்கும் ஆட்சி முறைக்குமான விசுவாசம் குறித்த கேள்வியை எழுப்புகின்றது.

நீதித்துறை ஜனநாயகம் பறிபோவதற்கு எதிராக சவால் விடுக்காது.
குறிப்பிட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமா அல்லது திருத்தத்தில் உள்ள விடயங்களுக்கு சர்வஜனவாக்கெடுப்பு அவசியமா என்பதை மாத்திரம் நீதிமன்றத்தினால் தீர்மானிக்க முடியும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டும். நாடாளுமன்றத்தை அடிப்படையாக கொண்ட ஆட்சிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

இனப்பிரச்சினைக்கான தீர்வாக நாடு தமிழ்கட்சிகள் முன்வைத்துள்ள சமஷ்டி முறையை நோக்கி செல்லவேண்டும். இதுவே  நாட்டுக்கு மிகவும் பொருத்தமான ஆட்சி முறை என தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget