2020 ஆம் கல்வி ஆண்டுக்காக தேசிய கல்வியியற் கல்லூரியில் மேலதிக கற்கைநெறியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுக்கு அமைய தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை சேர்த்துக் கொள்வது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.
www.moe.gov.lk என்ற இணையதளத்தின் ஊடாக எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் குறித்த மேலதிக தகவல்களை, 0112 787303 அல்லது 0112 787385 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
நாடு பூராகவும் உள்ள 19 தேசிய கல்வியியல் கல்லூரிகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் இடம்பெறும் 50 பாடநெறிகளுக்காக 4,253 பயிலுனர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment