அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் தவணைக்குரிய பாடசாலை விடுமுறை தினம் 2020 ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி என கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான காலம் 2020 ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றது.
அத்துடன் அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. மேலும் ஒக்டோபர் 12 ஆம் திகதி க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பமாகவுள்ளது.
Post a Comment