விபத்தினால் கை துண்டாடப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு சத்திர சிகிச்சை மூலம் துண்டாடப்பட்ட கை மீளவும் பொருத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஊடங்களுக்கு கருத்து கூறும்போது தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபருக்கு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் இளஞ்செழியன் பல்லவன் தலமையிலான மருத்துவ குழு துண்டாப்பட்ட கையை மீள பொருத்தும் சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் கைதுண்டாடப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் திகதி அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை வல்லுநர் இளஞ்செழிய பல்லவன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 12 மணித்தியாலங்கள் தொடர் சத்திரச்சிகிச்சை மேற்கொண்டனர்.
இந்தச் சத்திரசிகிச்சை வெற்றியளித்ததன் காரணமாக கிளிநொச்சி வாசியின் துண்டாடப்பட்ட கை நல்ல நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சில மாதங்களின் பின்னர் அவரது கைது பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
Post a Comment