நாட்டின் அனைத்து வீதிகளும் அடுத்த நான்கு ஆண்டுகளில் புனரமைக்கப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர்களின் கடமை மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மாவட்டங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிரமாகப் பங்களிக்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்களிடம் ஜனாதிபதி ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.
அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுடன் இணைந்து அரச பொறிமுறையை வினைத்திறனாக பயன்படுத்துவதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல மாவட்ட குழுத்தலைவர்களுக்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவிக்காக அமைச்சர்கள் அல்லாத இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பது அவர்களது முழு நேரத்தையும் அதற்காகச் செலவிடுவதற்கு என ஜனாதிபதி தெரிவித்தார்.
பல மாவட்டங்களுக்கு பொதுவான மற்றும் அவற்றுக்கு மாத்திரம் விசேடமான பிரச்சினைகளை அரசாங்கம் கண்டறிந்துள்ளது.
குடி நீர் மற்றும் நீர்ப்பாசன தேவைகள், நீர்ப்பாசன புனரமைப்பு, காட்டு யானைகள் கிராமங்களுக்கு வருதல், கல்வி மற்றும் சுகாதார பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
நிறைவேற்றுவதற்காக அமைச்சர்களுக்கும், இராஜாங்க அமைச்சர்களுக்கும் நியமனங்களை வழங்கும்போது மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களும் நியமிக்கப்பட்டனர் என ஜனாதிபதி தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தால் மேற்கொண்ட அபிவிருத்தி செயற்திட்டங்கள் பல நிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த வரவு- செலவு திட்டத்தில் நிதியை ஒதுக்கீடு செய்து இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து நிர்மாணப்பணிகளும் நிறைவு செய்யவேண்டும் என பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஏ.பி.சி.டி என வகைப்படுத்தப்பட்டுள்ள நாட்டின் அனை த்து வீதிகளையும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அபிவிருத்தி செய்வதற்குத் திட்ட மிடப்பட்டுள்ளது என பசில் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment