தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டித்து தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளினால் விடுக்கப்பட்டிருக்கும் ஹர்த்தால் அழைப்புக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஒத்துழைப்பை தொிவித்துள்ளனர்.
தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டமை மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உள்ளிட் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் இணைந்து நேற்று முன்தினம் சாவகச்சோி சிவன்கோவில் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று வடகிழக்கில் ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் வடக்கிலுள்ள வர்த்தக நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் அரச நிறுவனங்கள், போக்குவரத்து சேவைகள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி இன்றைய ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பகிரங்க அழைப்பை விடுத்திருக்கின்றது. மேலும் இலங்கை ஆசிரியர் சங்கம் தங்களது ஆதரவை பகிரங்கமாக தொிவித்துள்ளனர். அதேசமயம் பல்கலைகழக மாணவர்களும் தங்களது ஆதரவை தொிவித்துள்ளனர்.

Post a Comment