கொரோனா தொற்று காரணமாக அடுத்த ஆண்டில் உலகம் முழுவதும் 15 கோடி பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.
உலக வங்கி இது தொடர்பாக நேற்று முன்தினம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா தொற்று காரணமாக இவ்வாண்டு கூடுதலாக 8.8 கோடி முதல் 11.5 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமை நிலைக்குத் தள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 15 கோடியாக உயரும் அபாயம் உள்ளதாகவும், உலகம் முழுவதும் 1.4 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தீவிர வறுமையில் விழக்கூடும் எனவும் உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் தெரிவித்துள்ளார்.

Post a Comment