Ads (728x90)


தற்போது நாட்டில் உள்ள கொரோனா சமூகத்தொற்று தொடர்பில் விழிப்பாக செயற்படுங்கள் என யாழ்.மாவட்ட மக்களுக்கு அரசாங்க அதிபர் க.மகேசன் அவசர அறிவிப்பு விடுத்துள்ளார்.

மினுவாங்கொட, திவுலபிட்டிய பகுதிகளில் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டதை அடுத்து நாடு பூராகவும் கொரோனா தடுப்பு செயலணியினால் கொரோனா தொற்றினை தடுக்கும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் யாழ்.மாவட்ட மக்கள் அவதானமாக செயற்பட்டு தங்களை தாங்களாகவே பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும். அதனடிப்படையில் மக்கள் அநாவசியமற்ற நடமாட்டங்களை தவிர்த்து வீடுகளில் இருங்கள். வீதிகளில் பயணிக்கும் போது மாஸ்க் அணிவதோடு சமூக இடைவெளியினை பின்பற்றுங்கள். இதன்மூலம் கொரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

சமூகத்தொற்று எந்த உருவில் எங்கிருந்து, எப்போது தொற்றும் என யாருக்கும் தெரியாது. எனவே கொரோனா தொற்றிலிருந்து யாழ். மாவட்ட மக்கள் தங்களை பாதுகாப்பதற்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மினுவாங்கொட பகுதியில் இருந்து புங்குடுதீவிற்கு வருகை தந்தோர் தொடர்பில் சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

பொது இடங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிருங்கள். அத்தோடு அரச அலுவலகங்கள் வழமைபோல் செயற்படும். எனினும் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தங்களை சமூக தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும்  அரச அதிபர் கோரியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget