மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய பெண் ஒருவர் புங்குடுதீவுக்கு திரும்பிய நிலையில் அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் புங்குடுதீவு கடந்த 05ஆம் திகதி முடக்கப்பட்டது. இவ்வாறு அமுல்படுத்தப்பட்ட முடக்கல் நிலை இன்று அதிகாலை தளர்த்தப்படுவதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் எவருக்கும் தொற்றுஏற்படவில்லை என சுகாதாரப் பகுதியினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த புங்குடுதீவு பகுதியானது இன்று காலையிலிருந்து தற்காலிக முடக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளினை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், குறித்த பகுதியானது சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் எனவும் மாவட்ட செயலர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment