Ads (728x90)


நேற்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ள மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்கு நேற்றிரவு 21 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 21 பேர் நேற்று இரவு மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குரிய சிகிச்சைகள் மருதங்கேணி வைத்தியசாலையில் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்

மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு பொது மருத்துவ வல்லுநர் உள்பட 04 மருத்துவர்கள் நியமிக்கபட்டுள்ளனர். மேலும் 04 தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் மேலும் தெரிவித்தார்.

இந்த மருத்துவக் குழு ஒரு வாரம் தொடர்ச்சியாக கடமையாற்றிய பின்னர் மற்றொரு மருத்துவக் குழுவை மாற்றம் செய்யும் சுழற்சிமுறைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும், மேலும் மருதங்கேணி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 50 பேருக்கு சிகிச்சையளிக்கும் வகையில் படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget