Ads (728x90)


13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் 5வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது. 

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கப்பிட்டல்ஸ் அணியும் இறுதி ஆட்டத்தில் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணியின் கப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதன்படி டெல்லி அணியின் சார்பில் மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

ஆரம்பமே டெல்லி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து களமிறக்கிய ரஹானேவும் 2 (4) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஷிகர் தவானும் 15 (13) ரன்களில் ஜெயந்த் யாதவ் பந்தில் போல்ட்டாகி வெளியேறினார்.

அடுத்து கப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பாக ஆடிய ரிஷாப் பண்ட் 35 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்த நிலையில் 56 (38) ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஸ்ரேயாஸ் அய்யர் தனது அரை சதத்தை பதிவு செய்தார். அடுத்து களமிறங்கிய ஹெட்மயர் 5(5) ரன்களும், அக்‌ஷர் பட்டேல் 9(9) ரன்களும், ரபாடா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

நிதானமாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 65 (50) ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. 

மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், நாதன் கவுல்டர் நிலே 2 விக்கெட்டுகளையும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதனை தொடர்ந்து 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணியின் தொடக்க ஆட்டகாரரான குயிண்டன் டி கொக் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இதையடுத்து நிதானமாக விளையாடிய அணியின் கப்டன் ரோகித் சர்மா 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியாக மும்பை அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது. இஷான் கிஷான் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget