மானிப்பாய் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் கடையின் மீது தாக்குதல் நடத்தியதுடன் கடை உரிமையாளரையும் தாக்கிவிட்டு தப்பி சென்ற நிலையில் வழிமறித்த படையினர் வாள்வெட்டு குழு உறுப்பினர் ஒருவனை கைது செய்துள்ளனர்.
மேலும் வாள்வெட்டு குழு பயணித்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்றும் சம்பவ இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது. இன்று மாலை 6.30 மணியளவில் மானிப்பாய் சந்திக்கு அண்மையாக பொன்னாலை வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிள்களில் வந்த வாள்வெட்டு குழுவினர் கடைக்குள் புகுந்து உரிமையாளரின் கழுத்தில் தாக்கியுள்ளது. அத்தோடு கடையிலிருந்த பொருள்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பித்தவேளை அவ்வழியால் வந்த இராணுவத்தினர் அவர்களை துரத்தி சென்று ஒருவரை பிடித்துள்ளனர். அத்துடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment