Ads (728x90)


இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச எண்ணக்கருவிற்கமைய ஜனாதிபதி செயலணியின் ஒப்புதலின் கீழ், பிரதமர் அலுவலகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் ‘கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டம் நேற்று யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

முழுக் குடும்பமும் ஒன்றாக உடற்பயிற்சி உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடக்கூடிய, அமைதியாக தங்களது நேரத்தை செலவிடக்கூடிய வகையில் பல்நோக்கு இளைஞர் நிலையங்கள் நாடுமுழுவதும் அமைக்கப்படும் என்று இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் கூடிய ‘சமூக உட்கட்டமைப்பு குழு’வினால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரு மாவட்டங்களுக்கான அமைச்சினால் எதிர்வரும் ஆண்டில் செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

அதிகாரிகளினால் மாவட்டத்திற்குள் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களினால் அப்பிரச்சினைகள் தொடர்பில் அச்சந்தர்ப்பத்தில் பதிலளிக்கப்பட்டது.

கட்டுமான பணிகள் நிறைவு செய்யப்படாத அனைத்து விளையாட்டு மைதானங்களினதும் பணிகள் எதிர்வரும் சில வருடங்களுக்குள் நிறைவுசெய்யப்பட்டு வீர, வீராங்கனைகளிடம் கையளிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் பேரழிவாக விளங்கும் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்களுக்கான புனர்வாழ்வு நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த அமைச்சர், இளையோருக்கு பல்நோக்கு இளைஞர் நிலையமொன்றை நிறுவுவதற்கான வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வேலைத்திட்டம் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதை தடுப்பதற்கும், குடும்ப நல்லிணக்கத்தை மேம்படுத்தவும், தினசரி உடற்பயிற்சி மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணவும் உதவும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget