Ads (728x90)


சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கில் உள்ள சர்வ மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பான மனு மத தலைவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் ஸ்ரீநாக விகாரை விகாராதிபதி மீஹாகஜதுரே ஸ்ரீ விமலதேரர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மதத்தலைவர்களின் கையெழுத்து அடங்கிய மனு ”குரலற்றவர்களின் குரல்” அமைப்பின் இணைப்பாளர் மு.கோமகனால்  விகாராதிபதியிடம் கையளிக்கப்பட்டது.


Post a Comment

Recent News

Recent Posts Widget