யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் வகையில் செம்மணிப் பகுதியில் அமைக்கப்பட்ட அலங்கார நல்லூர் கந்தனின் வளைவு நேற்று தைப்பொங்கல் தினத்தில் திறந்து வைக்கப்பட்டது.
நேற்றைய தினம் நல்லூர் ஆலயத்திலிருந்து திறப்பு விழாவுக்குத் தேவையான பொருட்கள் பாராம்பரிய முறைப்படி மாட்டு வண்டிலில் செம்மணி அலங்கார வளைவு அமைந்துள்ள இடத்திற்கு எடுத்து வரப்பட்டன. சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களைப் பாராயணம் செய்ய இறையாசியுடன் அலங்கார வளைவுத் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
சிவாச்சாரியர்கள், சைவசமயப் பெரியார்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர், உறுப்பினர்கள், அதிகாரிகள், நல்லூர் கந்தசுவாமி ஆலய பரிபாலகர்கள் எனப் பலரும் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Post a Comment