Ads (728x90)

பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10,500 ஆல் அதிகரிக்கப்படவுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இதற்கமைவாக உப வேந்தர்கள் மற்றும் திறைசேரியின் பங்களிப்பும் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த மாதத்திற்கு முன்னதாக கொவிட் தடுப்பூசியை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget