Ads (728x90)

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 60 ஆக அதிகரிப்பதற்கு கடந்த வரவுசெலவு திட்டத்தின் போது அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதற்கிணங்க தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் கடந்த 24 ஆம் திகதி தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்பட்டது.

தற்போது இலங்கையில் தனிநபர் ஒருவரின் ஆயுட்காலம் 75 ஆக அதிகரித்துள்ள நிலையில் பெண்களின் ஓய்வூதிய வயதெல்லை 50 ஆகவும் ஆண்களின் ஓய்வூதிய வயதெல்லை 55ஆகவும் இருந்த நிலையில் மேற்படி வயதெல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

தற்போது பெண்கள் 50 வயதில் ஓய்வுபெற்றால் அவர்கள் மேலும் 25 வருடங்கள் பெரும் கஷ்டங்களுக்கு மத்தியிலேயே வாழ்க்கையை கொண்டு நடத்தவேண்டியிருக்கும். அதேபோன்று ஆண்கள் மேலும் 20 வருடங்கள் தொழில்கள் இல்லாமல் கஷ்டங்களை எதிர்கொள்ள நேரும். அதனைக் கருத்திற்கொண்டே ஓய்வூதிய வயதை அதிகரிப்பது காலத்திற்கு பொருத்தமானதென்பதை தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.  

அதேவேளை தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதிற்கு ஒரு முறையான கால எல்லை காணப்படவில்லையென்பதையும், அந்த நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் நியமனக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வயதுக்கேற்பவே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கிணங்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் திருத்தம் செய்யப்படவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget