Ads (728x90)

இலங்கையில் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக மனித உரிமை பேரவையில் புதிய செயலகம் ஏற்படுத்தப்படவுள்ளது.

மனித உரிமை பேரவையின் செயலளர் ஜோறோ ஒஜிமா Goro Onojima உறுப்புநாடுகளிற்கு வழங்கியுள்ள சுற்றுநிருபத்தில் 13 உறுப்பினர்களை கொண்ட செயலகம் குறித்தும் அதற்கு வருடாந்தம் அமெரிக்க டொலர் தேவைப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

உருவாக்கப்படவுள்ள இந்த செயலகம் உலகளாவிய நியாயாதிக்கத்தை பயன்படுத்தும் நாடுகள் பயன்படுத்துவதற்கான ஆதாரங்களை சேகரிக்கும்.

இதன் காரணமாக இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட படைத்தரப்பினர் வெளிநாடுகளில் கைது செய்யப்படலாம். வெளிநாட்டு நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம். இலங்கையின் யுத்தத்துடன் தொடர்புபட்ட அரசியல் தலைவர்களும் வெளிநாடுகளில் கைது செய்யப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget