Ads (728x90)

மேல் மாகாணத்தைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என்றும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாடசாலைகளை பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை இரண்டு கட்டங்களாக மீண்டும் திறக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

அதன்படி மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் 5, தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய பிரிவுகளுக்கு இன்று முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன. மேல் மாகாணத்தில் ஏனைய தரங்களுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படுகின்றது.


Post a Comment

Recent News

Recent Posts Widget