Ads (728x90)

அஸ்ராசெனிகா-கோவிஷீல்ட் தடுப்பு மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பதாக இந்தியாவின் மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அடுத்து வரும் வாரங்களில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளது.

இத்தடையால் உலக சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் இருக்கும் 190 நாடுகள் பாதிக்கப்படலாம். உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் நியாயமாக கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்தை உறுதி செய்வது தான் இந்த கோவேக்ஸ் திட்டத்தின் நோக்கம்.

இதுவரை இந்தியா 60 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களை 76 நாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இதில் பெரும்பாலான டோஸ்கள் ஒக்ஸ்போர்டு அஸ்ட்ராசெனிகா மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Recent News

Recent Posts Widget