Ads (728x90)

யாழ்ப்பாணம் கல்வி வலய பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ். கல்வி வலய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீள ஆரம்பிக்கப்படவிருந்த போதிலும் எதிர்வரும் 09 ஆம் திகதி முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதை கருத்திற் கொண்டு விடுமுறை நீடிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய சிறப்பு விடுமுறை இன்று தொடக்கம் மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்படுகிறது. 

யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பித்திலேயே திறக்கப்படவுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget