Ads (728x90)

2020 ஒக்டோபரில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை, புலமைப்பரிசில் பரீட்சை என்பன ஒக்டோபர் மாதத்திற்கும், சாதாரண தர பரீட்சைகள் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Recent News

Recent Posts Widget