யாழ் மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட காவல்படையின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களின் சீருடைகளும் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது.
காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறும் , அவர்களின் சீருடைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸார் ஆணையாளருக்கு பணித்திருந்தனர். அதன் பிரகாரம் காவல் படையின் கடமைகள் இடைநிறுத்த பட்டுள்ளதுடன் அவர்களின் சீருடைகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அணிந்திருந்த சீருடையில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அதன் செயற்பாடுகளை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
Post a Comment