Ads (728x90)

இலங்­கை­யின் உள்­ள­கப் பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்க சர்­வ­தேச பொறி­மு­றையை ஒரு­போ­தும் ஏற்­க­மாட்­டோம் என ஐ.நா. மற்­றும் அதன் கிளை அமைப்­பு­க­ளி­ட­ம் தெளி­வாக எடுத்­து­ரைத்­துவிட்டதாக வெளி­வி­வ­கார அமைச்­சர் பேரா­சி­ரி­யர் ஜி.எல். பீரிஸ் தெரி­வித்­தார். 

இவ்­வாறு ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வின் தலை­மை­ய­கத்­தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பில் கலந்­து ­கொண்டு கருத்து தெரிவிக்கையி­லேயே அவர் இந்த விட­யத்தை குறிப்­பிட்­டார்.

மனித உரி­மை­கள் பேர­வை­யு­டன் மாத்­தி­ர­மல்ல ஐ.நா. உட்­பட அதன் ஏனைய கிளை அமைப்­பு­க­ளு­டன் நாம் ஒத்­து­ழைப்­பு­டன் செயற்­பட்­டு­வ­ரு­கின்­றோம். எதிர்­கா­லத்­தி­லும் இந்த நடை­முறை தொட­ரும். அதில் எவ்­வித மாற்­ற­மும் வராது. கொரோ­னாப் பர­வ­லுக்கு மத்­தி­யி­லும் அபி­வி­ருத்தி மற்­றும் நல்­லி­ணக்க முயற்­சி­க­ளில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றம் பற்­றி­யும் எடுத்­து­ரைத்­தோம்.

இலங்­கை­யின் உள்­ள­கப் பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்­கும் கடப்­பாடு தேசிய நிறு­வ­னங்­க­ளுக்கே இருக்­கின்­றது. அதற்­கான பொறுப்பை நாம் வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­க­மாட்­டோம். அவ்­வாறு வழங்­கு­வது அர­ச­மைப்­புக்கு முர­ணான செய­லா­கும் என்­ப­து­டன் அர­சி­யல் கட்­ட­மைப்­புக்­கும் எதி­ரான நட­வ­டிக்­கை­யா­கும்.

ஐ.நா. மனித உரி­மை­கள் பேர­வை­யா­னது இலங்­கையை இலக்கு வைத்து செயற்­பட்­டு ­வ­ரு­கின்­றது. சர்­வ­தேச பொறி­மு­றையை உரு­வாக்கி சாட்­சி­க­ளைத் திரட்டி இலங்­கையை சர்­வ­தேச நீதி­மன்­றிற்கு கொண்­டு­செல்­வ­தற்கு முயற்சி எடுக்­கப்­ப­டு­கின்­றது. இதற்கு இட­ம­ளிக்­க­மாட்­டோம். சாட்­சி­க­ளின்   தக­வல் வெளி­யி­டப்­ப­டாது. எந்த அடிப்­ப­டை­யில் சாட்­சி­கள் திரட்­டப்­ப­டு­கின்­றன       என்­ப­தும் தெரி­யாது.

மனித உரி­மை­கள் பேர­வை­யில் நடை­பெற்ற விவா­தத்­தின்­போது அணி­சேரா நாடு­கள் மற்­றும் முஸ்­லிம் நாடு­கள் இலங்கைக்கு ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தின. மனித உரிமை விவ­கா­ரத்தை உள்­ளக பிரச்­சி­னை­க­ளில் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என­வும் அவை சுட்­டிக்­காட்­டின எனவுமர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget