Ads (728x90)

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நீக்கப்படும் நிலையில் தனியார் பஸ்களில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இவ்விதிமுறைகளுக்கு அமைய ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் பேருந்துகளில் பணிபுரியும் சாரதி, நடத்துனர்கள் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருப்பது கட்டாயமாகும் என்று அமைப்பின் தலைவர் நிலந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

பேருந்து ஊழியர்கள் மற்றும் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. பஸ் நடத்துனரே அதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும். 

ஆசன எண்ணிக்கைகளுக்கு அமைய மட்டுமே பயணிகள் பயணிக்க வேண்டும். அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிகின்றவர்களுக்கு முன்னுரிமை அளித்தல் வேண்டும். அத்துடன் கூடுதலான கட்டணம் அறவிடக் கூடாது. பேருந்துகளில் யாசகம் பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் இந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பேருந்தில் வெற்றிலை மெல்லுதல் மற்றும் புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. அதன் முழுப்பொறுப்பும் நடத்துனருக்கே உள்ளது. இந்த புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கண்காணிப்பதில் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பரிசோதகர்கள் நாடுபூராகவும் சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அத்துடன் கொவிட் தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களைக் கருத்தி கொண்டு அவர்களுக்காக போக்குவரத்து அமைச்சினால் ரூபா 50,000 பெறுமதியுள்ள வருடாந்த நிவாரண பொதி முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget