Ads (728x90)

இலங்கையில் பொருளாதாரரீதியில் பலவீனமான நிலையில் உள்ள குடும்பங்கள் உண்ணும் உணவை குறைத்து கொண்டுள்ளன அல்லது ஊட்டச்சத்துக்கள் குறைந்த உணவுகளை உண்கின்றனர் என ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

பொருளாதாரரீதியில் பலவீனமான நிலையில் உள்ள மக்களின் உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிலை என்பன எதிர்மறையான தாக்கத்திற்குள்ளாகியுள்ளன என உணவு விவசாய ஸ்தாபனம்  தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனம் தனது சர்வதேச தகவல் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை ரூபாவின் வீழ்ச்சி, எரிபொருள் நெருக்கடி, உர நெருக்கடி போன்றவற்றால் உருவாகியுள்ள பணவீக்கம் காரணமாக பல குடும்பங்கள் தாங்கள் நாளாந்தம் உண்ணும் உணவை குறைத்துக் கொண்டுள்ளன என  இது தெரிவித்துள்ளது.

இலங்கையில் அரிசியின் விலை செப்டம்பர் நவம்பர் மாதங்களில் அதிகரித்தது. டிசம்பரில் ஓரளவு நிலையாக காணப்பட்ட பின்னர் மீண்டும் விலைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. ஜனவரியில் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு விலைகள் உயர்ந்துள்ளன. இது முன்னைய வருடங்களை விட 50 வீதம் உயர்வு என இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget