முதற்கட்டமாக எதிர்வரும் காலங்களில் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விடுவிக்கப்படும் என உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி சியோ கந்தா தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே சியோ கந்தா இதனைத் தெரிவித்தார்.
மருத்துவம் மற்றும் சுகாதாரத் தேவைகள், சமூகப் பாதுகாப்பு, விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் எரிவாயு தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவதாக உலக வங்கி பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment