Ads (728x90)

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை திட்டமிட்டவாறு எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய விண்ணப்பதாரிகளுக்கான அனுமதி அட்டை மற்றும் பரீட்சை நிலையங்களுக்கு வினாத்தாள்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகள் மீண்டும் ஜூன் மாதம் 06ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .



Post a Comment

Recent News

Recent Posts Widget