இன்று திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி இன்று இரவு 11.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு நாளை செவ்வாய்க்கிழமை காலை 5.00 மணிக்கு தளர்த்தப்படும்.
முன்னதாக நாடளாவிய ரீதியில் இன்று இரவு 8.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு நாளை காலை 5.00 மணிக்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Post a Comment