Ads (728x90)

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் ஏற்பாடு செய்திருந்த மே தினக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

ஆயிரக்கணக்கான மக்கள் இப்பேரணியில் கலந்து கொண்டமையால் சுதந்திர சதுக்கத்திற்குச் செல்லும் வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பின. இதனால் அவ்வழியூடான சகல போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்தது.

கொழும்பு - கெம்பல் பார்க் பகுதியில் ஆரம்பமான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி பின்னர் அங்கிருந்து பொரளை, கொழும்பு - தேசிய வைத்தியசாலை சந்தியூடாக தாமரை தடாக பிரதேசத்தைக் கடந்து சுதந்திர சதுக்கத்தை சென்றடைந்தது.

'சுதந்திரத்திற்கான போராட்டம்' என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியினால் .இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



 

Post a Comment

Recent News

Recent Posts Widget