Ads (728x90)

உடல் சூடு அதிகமாவதால் உடலில் உள்ள நீர் குறைவடைந்து சிறுநீர் கழிக்க சிலர் சிரமப்படுவர். இதனால் சிறுநீர் தொற்றுநோய்களும் அதிகம் பரவுகிறது. இவர்கள் இளநீரைப் பருக சிறுநீர் தாராளமாகப் கழியும். 

நிறைய மருந்து, மாத்திரைகள் சாப்பிட நேரும்போது, கூட இளநீர் சாப்பிட்டால் உடலில் மருந்தின் தாக்கத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. 

இளநீரில் சோடியம், பொட்டாசியம், கல்சியம், மக்னீசியம், பொஸ்பரஸ், இரும்புச்சத்து என தாதுப்பொருட்கள் நிறைந்துள்ளது. மேலும் இளநீரில் வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன. 

தாதுப் பொருட்கள், குறிப்பாகப் பொட்டாசியம் அதிக  அளவில் இருப்பதால் சிறுநீரகப் பாதிப்படைந்தவர்கள் இளநீரைப் பருகக் கூடாது.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அதிக அளவில் அல்லது தினமும் இளநீர் பருகக்கூடாது. முற்றின தேய்காயில்  உள்ள இளநீரே இவர்கள் பருக உகந்தது.




Post a Comment

Recent News

Recent Posts Widget