Ads (728x90)

இன்று தொடக்கம் கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கு முகக்கவசம் அணியும் முறைமையை பின்பற்ற வேண்டியது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு மற்றும் இலங்கையின் மருத்துவக் கல்லூரிகள் இணைந்து எடுத்த தீர்மானத்தின் படி, சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

மேலும் பிசிஆர் பரிசோதனை மற்றும் றபிற் அன்ரஜன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget