Ads (728x90)

இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வழங்கப்படும் கடன் மற்றும் காலம் தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் எட்டப்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

இதற்காக எதிர்வரும் வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த குழு கடன் முகாமைத்துவ திட்டம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தவுள்ளது. அத்துடன் இலங்கை அவ்வாறான கடன் திட்டத்தை தயாரித்து நிறைவுறுத்தம் வரை வழங்கப்படக் கூடிய கடன் மற்றும் காலம் தொடர்பில தீர்மானிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அவதானத்துடன் செயற்படுவதாகவும் ஜெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget