Ads (728x90)

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்புக்களை கருத்திற் கொண்டு அதிபர்களின் இணக்கப்பாட்டுடன் ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளிலேயே கற்பிப்பதற்கான சந்தர்ப்பத்தினை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக மாகாண கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் வலய கல்விப்பணிப்பாளர்களுக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் கல்வி அமைச்சின் செயலாளரினால் விசேட சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் செயற்படுமாறும் கல்வி அமைச்சின் செயலாளரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகள் என்ற பேதமின்றி இந்த சுற்று நிருபத்தை நடைமுறைப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget