Ads (728x90)

வடக்கு - கிழக்கில் வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள வயல் காணிகளை விவசாயிகளுக்கு மீள வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இப்பணிப்புரை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட கமநல அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆராய்ந்த அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

தற்போது வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வன பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள வயல் காணிகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை வழங்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர இதன்போது அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget