வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கும் அரச ஊழியர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளம் மூலம் தங்கள் தகவல்களை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்க வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களின் வீதத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது அவர்களின் ஓய்வூதியம் மற்றும் அவர்களின் தொழில் தொடர்பில் எந்த பாதிப்பும் வராத வகையில் ஒரு சுற்றறிக்கையை வெளியிடவும் ஏனைய அமைச்சுக்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment