இன்று கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து வழங்கிய குறித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக மேற்டி ஊடகம் தெரிவித்துள்ளது.
எனக்கு ஐந்து வருடங்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது. நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனவும் குறித்த நேர்காணலில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளதாக இச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தன்னை பதவி விலகுமாறு கோரி பல மாதங்களாக வீதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும், தனக்கு வழங்கப்பட்டுள்ள எஞ்சிய இரண்டு வருட பதவிக்காலத்தையும் நிறைவு செய்யவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில் அதனை சீர்செய்வதில் தான் கவனம் செலுத்தி வருவதாகவும், தான் மீண்டும் தேர்தலில் நிற்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி குறித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Post a Comment